*************
உன் பெயரை மீண்டும் மீண்டும்
சொல்லிபார்க்கிறேன்
முதலாம் வகுப்பு மாணவன் போல.........

உதட்டிலிருந்து தேன்
வழிந்து கடலாகியது..........

***************

************
எனக்கு அவள் மேல்
தீராத கோபம்!!!!!!!!!!

கடனாக என்னிடம் வாங்கிய
முத்தத்திற்க்கு.................
முதல் மட்டும் தந்து
ஏமாற்றிவிட்டால்!!!!!!!!!!!!!

வட்டிக்கு அலைந்து அலைந்து
என் அசலும் தீர்ந்து விட்டது........

சங்கதி ஊருக்கு வரமுன்
இரண்டையும்
சத்தமில்லாமல் தந்துவிடு-என்னவளே .

********************

**********
அவளை மறுபடியும் மறுபடியும்
பார்க்கிறேன்-- திருப்தியடையவில்லை
என் மனம்

என்னை ஒரு முறை கண்ணாடியில்
பார்த்ததுமே சலித்துவிடுகிறேன்.....
********************


************
ஆண்கள் பாவம் ...
அன்றுதான்
உணர்ந்து கொண்டேன்

முதன் முதலாக
உன்னை பார்த்தபோது............

***************

***********
பூங்காவில் உன்னோடு
தனிமையில் நான் மட்டும்
இருக்க விரும்பினேன்

பாவம் நான்..........
கிடைத்தது ஏமாற்றம் தான்

தேன் எடுக்க வந்த வண்டுகள்
பூவை மறந்து
உன்னை சூழ்ந்து விட்டன

பாவம் வண்டுகள்.......
இறுதியில் என் போல் ஆயின .....

****************


***********
நான் வந்த பாதையை
திரும்பி பார்க்கிறேன்
பூக்களால் பூத்திருந்தது
வழமைக்கு மாறாக

பிறகு தான் உணர்ந்து கொண்டேன்
என்னவளின் வருகையை
அவளின் வாசத்தை வைத்து................

**************

2 comments:

//உன் பெயரை மீண்டும் மீண்டும்
சொல்லிபார்க்கிறேன்
முதலாம் வகுப்பு மாணவன் போல..//

super !!!!!!
சிறந்த கற்பனை.... !!

நன்றி வதையன் அவர்களே ............

Post a Comment

About this blog

Pages

Powered By Blogger

About Me

My photo
இங்கே நீங்கள் வாசிக்கும் பதிவுகள் அனைத்தும் என் எண்ணபதிவிலிருந்து வெளிவந்தவை .............. உங்கள் கருத்துக்களும் இங்கே வரவேற்கபடுகின்றது .....

Followers

Search This Blog

துளியில் நனைந்தவர்கள்

viewers online