*************
உன் பெயரை மீண்டும் மீண்டும்
சொல்லிபார்க்கிறேன்
முதலாம் வகுப்பு மாணவன் போல.........
உதட்டிலிருந்து தேன்
வழிந்து கடலாகியது..........
***************
************
எனக்கு அவள் மேல்
தீராத கோபம்!!!!!!!!!!
கடனாக என்னிடம் வாங்கிய
முத்தத்திற்க்கு.................
முதல் மட்டும் தந்து
ஏமாற்றிவிட்டால்!!!!!!!!!!!!!
வட்டிக்கு அலைந்து அலைந்து
என் அசலும் தீர்ந்து விட்டது........
சங்கதி ஊருக்கு வரமுன்
இரண்டையும்
சத்தமில்லாமல் தந்துவிடு-என்னவளே .
********************
**********
அவளை மறுபடியும் மறுபடியும்
பார்க்கிறேன்-- திருப்தியடையவில்லை
என் மனம்
என்னை ஒரு முறை கண்ணாடியில்
பார்த்ததுமே சலித்துவிடுகிறேன்.....
********************
************
ஆண்கள் பாவம் ...
அன்றுதான்
உணர்ந்து கொண்டேன்
முதன் முதலாக
உன்னை பார்த்தபோது............
***************
***********
பூங்காவில் உன்னோடு
தனிமையில் நான் மட்டும்
இருக்க விரும்பினேன்
பாவம் நான்..........
கிடைத்தது ஏமாற்றம் தான்
தேன் எடுக்க வந்த வண்டுகள்
பூவை மறந்து
உன்னை சூழ்ந்து விட்டன
பாவம் வண்டுகள்.......
இறுதியில் என் போல் ஆயின .....
****************
***********
நான் வந்த பாதையை
திரும்பி பார்க்கிறேன்
பூக்களால் பூத்திருந்தது
வழமைக்கு மாறாக
பிறகு தான் உணர்ந்து கொண்டேன்
என்னவளின் வருகையை
அவளின் வாசத்தை வைத்து................
**************



2 comments:
//உன் பெயரை மீண்டும் மீண்டும்
சொல்லிபார்க்கிறேன்
முதலாம் வகுப்பு மாணவன் போல..//
super !!!!!!
சிறந்த கற்பனை.... !!
நன்றி வதையன் அவர்களே ............
Post a Comment