
படிக்காத பேதை அவள் அனுபவத்தில் மேதை இவள்...
நிலாவுக்கும் சோறூட்டுவாள் நீ உண்பதற்காய்...
பல கதைகள் உரைத்துடுவாள் மழலைமொழியில்..
மழலைமொழியின் மொழி பெயர்ப்பாளரும் இவள் தான்...
இவள் ஊட்டும் பால் ஞானம் கொடுக்கும் போதி மரம்..
அன்பையும் அறிவையும் குழைத்து ஊட்டுவாள் சோறாய்..
சிலநேரங்களில் அவளுக்கு உணவு பிள்ளையிடும் முத்தம்மட்டும்தான்!
விரதம் இருப்பாள் நீ சுகமாய் உண்டு உறங்க ......
விழிகளுக்குள் உன்னை வைத்து இமைகளால் காத்திடுவாள்..
போற்று அவளே தெய்வமாய் தெய்வமும் உன்னை ஆதரிக்கும் .......


0 comments:
Post a Comment