

மார்கழி மாதத்தில் ஒருநாள் .................
காலை 5 மணி................................
காலை இளம் பனி இன்னும் சரியாககூட விலகவில்லை....
மொட்டுக்கள் எல்லாம் மலர்வதை மறந்து ஆழ்ந்த உறக்கதில் இருந்தன....
பூமி அன்னையோ இறுக்கி இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்..................
அந்த அழகிய காலை பொழுது, நான் மட்டும் வாக்கிங் போய்க்கோண்டு இருந்தேன்...........
ஆனால் சாலையின் இருமருங்கிலும் தூங்கவே வழியில்லாமல் கிடக்கும்ஒரு கூட்டம்!
அல்லது எதுவுமே இல்லாத ஒரு கூட்டம்!
குளிரால் நடுங்கும் ஒரு பிள்ளை கட்டி அணைக்கும் ஒரு தாய்...........
பசியால்துடிக்கும் ஒரு பிள்ளை பாலே இல்லாத மார்பில் பால் கொடுக்கும் தாய்.................

பிள்ளைக்கு முத்தமிட்டு தன் பசியை மறக்கும் தாய்..................
வசந்ததுக்காய் காத்திருக்கும் மரங்கள் போல ஜனங்களின் வருகைக்காய் காத்திருக்கும் தெருக்கள் !
அல்லது தெரு வாசிகள் !
எதற்க்கு இது ???
காலை உணவுக்கா ?
அல்லது அன்றைய ஒரு பொழுது உணவுக்கா??
இல்லை பக்கத்து தட்டில் ராத்திரி வாங்கிய கடன் கொடுக்கவா.???
இல்லை இரவு நுளம்புக்கு கொசு வர்த்திக்கா ???????
(இரத்தம் இல்லாதவர்களிடம் இரத்தத்தை குடிப்பதே இந்த நாட்டில் உள்ள கொசுக்களுக்கும் பழக்கப்பட்டுவிட்டது )
இப்படியாக விடை தெரியாத கேள்விகள் என்னில்!!!!!
அல்லது விடையே இல்லாத கேள்விகள் என்றே வைத்துக்கொள்ளலாம் !!!! ..
அதற்க்கு இடையில் என்னிடம் கைவிரித்தது ஓர் எதிர்காலம்
நானும் கைவிரித்து விட்டேன் ......
வாங்கிங்க் போகும் என்னிடம் ஏது பணம் ,பொருள்.........
பாவம் குழந்தைக்கு ஏமாற்றம்................
ஆனாலும் அதற்க்கு அது புதிதல்ல.........
எனக்கு புதிதுதான் .................
கொடுக்கமுடியாதது !!!!
தந்தது பெரிய மாற்றம் ..................
குழந்தையை கடந்து வெகு தூரம் வந்திருப்பேன்
இத்தனை காட்சிகளும் என் முன்னால் படமாக்க பட
என் மன திரையில் ஒரு சஞ்சலம்
சஞ்சலத்திற்க்கு காரணம் அந்த பால்மணம் மாறாத சிசுவா??? அல்லது நான் கண்ட காட்ச்சிகளா????? என் மனமே சண்டை பிடித்துக்கொண்டது!!!!!!!!!!!!!!
அப்போது தான் என்னுள் பல கேள்விகள்...........
இல்லை இல்லை வேள்விகள் ...........
இவர்கள் யார் ?
போரில் எல்லாவற்றையும் பறிகொடுத்த அகதிகளா?
இல்லை பிறப்பிலேயே அநாதைகளா ??
மனித மிருகங்களை பெற்றெடுத்த தெய்வங்களா ???
யார் அறிவார்!!!!!!!!!!!!!
காலம் பதில் சொல்லுமா ? ......
இல்லை காலன் தான் பதில் சொல்வானா!!!!!!!!!!!!!!!!!!!!!!!
***************************************************************************************
நேரம் 6:00 ஆகியிருக்கும்
என்கூடவும் சேர்ந்தது ஒரு கூட்டம்
கொஞ்சம் வாக்கிங்
சிலது ஜாக்கிங்க்
சூரியனும் மெல்ல வாக்கிங் வருகிறான் என்னோடு
ம்ம்ம்ம்ம் சரி எங்களோடு ..........................
நித்திரையில் இருந்த கடை வாசல்கள் அப்போதுதான் மெல்ல கண் விழித்துபார்க்கின்றன
பூமியோ சோம்பல் போக்கிறது
தெருவழியே இருந்த கூட்டங்களும் தங்கள் தொழிலுக்கு கெளம்புகின்றன
கூட்டம் கலைகிறது
கூட்டம் கூடுகிறது
மீண்டும்
நினைவில் குழந்தை
ஏதாவது கிடைத்திருக்கும் என்கிறது மனது
நல்ல ஜீவன்களும் உலகில் உண்டுதானே !!!!!!!!!!!!
எனக்கு நானே சமாதானம்..........................................
அல்லது உண்மை என்றே சொல்லலாம்.....................
மயான அமைதியாக இருந்த கொழும்பு நகரமே சற்றே நிமிடங்களில்
மரண வீடாய் ஆனது....................
அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரிந்த வாகனங்கள் ........................
கண்ணிமைக்கும் நொடிக்குள் பல கடந்துசென்றது......................
நகரமே ஒலி வெள்ளத்தில் மூழ்கியது
நகரமே நரகமானது
நான் வாக்கிங் போய் திரும்பும் இடம் இன்னும் கொஞ்ச தூரம் போகவேண்டியதால் என் பயணம் தொட்ர்ந்தது
**********************************************************************************************************************
நேரம் ஒரு 7:00 ஐ எட்டியிருக்கும் ............
இலைகளே தெரியாமல் பூத்திருக்கும் மரங்கள்
பூக்களால் நிரப்பப்பட்ட பாதைகள்
இடை இடையே மேனியில் விழும் நீர் துளிகள்
என்று
என் ரணங்களுக்கு மருந்தாகி
என்னை பூரணமாக்கியது........................................
துள்ளி குதித்து பாடசாலை செல்லும் பள்ளி பூச்சிகள்
பட்டாம் பூச்சிகள்
கண்களை கொள்ளை கொள்ளும் தாவணி
என்று என் மனமே ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது
நான் கடந்து வந்த பாதைகளையும் மறந்துவிட்டேன்
என் மனதில் இருந்த சஞ்சலங்களுக்கு சிறகு முளைத்துவிட்டது
கூடவே எனக்கும் முளைத்துவிட்டது
காற்றில் மிதந்து சொர்க்கத்திற்க்கே செல்வதுபோல உணர்வு................................
கொஞ்சம் சென்றதும்..............................
அழகிய இளம் சோலை ஒன்று எனக்கு எதிராய் வாக்கிங் வந்துகொண்டிருந்தது
தன் குட்டி நாயுடன்....................
கொடுத்து வைத்தது நாய்.........................
அத்ற்க்கு உடுப்பு
நாய்க்கு உடுப்பா??????
பனியில் யூரம் வந்துவிடும் ........ம்ம்ம்ம்ம்.......................................
சட்டையில்லாத தெருவாசிகள் எண்கண்முன் தோன்றினர்
உடனேயே மறைந்தனர் அவர்கள்........................
நானும் என்னை மறந்துவிட்டேன்
அவள் என்னை நெருங்கிவிட்டதால்
என்னருகே வந்த அவள்
“டைம் பிளீஸ் “
(என் டைம் நல்லாய் இருக்குது எண்டு நினைச்சு கொண்டு)
இப்ப.... வந்து வந்து நல்ல நேரமுங்கோ ........
எண்டு ஏதோ என்னை அறியாமலே சொல்லிவிட்டேன்
அவளும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள் .....................
அப்போது தான் யாரோ நேரம் ஏழு அரை என்று சொன்னது என் காதில் விழுந்தது
நல்ல வேளை ஏழு அரையிலிருந்து தப்பிவிட்டேன் என்றது உள் உணர்வு
(ம்ம்ம்ம் உண்மைதான் சனி பிடித்தால் விடாது
உஷார் நண்பர்களே !!!!!அழகை பார்த்து மயங்கி விடாதீர்கள்
அழகில்தான் ஆபத்து இருக்கிறது )
இவ்வாறு அழகிய கனவில் மிதந்து கொண்டிருந்த என்னை யாரோ தட்டி எழுப்புவது போல சூரியனும் தன் பொற் கதிர்களால் என் மேனியை பதம் பார்க்கத் தொடங்கிவிட்டான் .
காலை வெய்யில் உடம்புக்கு நல்லது தானே அதனால் நான் அவனை கண்டுகொள்ளவில்லை ...........
ஆனாலும் நேரமும் 8:00 ஆகிவிட்டது நான் வர வேண்டிய இடமும் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு வீடுநோக்கி திரும்பினேன்.....
அப்பொழுதுதான் துன்பங்க்களின் பாதையை மறுபடியும் சந்திக்க போகிறேன் என்று ஒரு ஏக்கம்
உடனே குழந்தை நினைவில் வர
குழந்தைக்காக
நான் வந்த பாதையில் எனக்கு தெரிந்த ஓர் கடையில் கடனுக்கு கொஞ்ச பழங்களை வாங்கிக்கொண்டு சென்றேன் ........
அப்போது தொடக்கம் என் நினைவில் குழந்தைதான்.....................
குழந்தை நினைவில் ???????????????
வேறொருவர்
இல்லை
தாய்
இல்லை
உடன்பிறப்புக்கள்
இல்லவே இல்லை பசி மட்டும்தான் ......................................................
ஒருநாள் பசிக்கு மட்டும் என்னால் முடிந்தது